×

கோயிலில் உண்டியலை உடைத்து திருடியவர் கைது

ஜலகண்டாபுரம், செப்.12: ஜலகண்டாபுரம் அடுத்த செலவடை கிராமத்தில் கோயபெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலின் அர்ச்சகராக தோரமங்கலம் பகுதியை சேர்ந்த குணசேகர பட்டாச்சாரியார் இருந்து வருகிறார். இவர் கடந்த மாதம் 24ம் தேதி வழக்கம்போல் கோவிலுக்கு சென்றபோது கோயிலின் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து அவர் ஜலகண்டாபுரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வந்தனர். இந்நிலையில் திருட்டில் ஈடுபட்ட சூரப்பள்ளி கிராமம், நரியம்பட்டி பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் சுரேஷ் (எ) ஆறுச்சாமியை போலீசார் கைது செய்தனர்.

 

The post கோயிலில் உண்டியலை உடைத்து திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Jalagandapuram ,Goyaperumal ,Gunasekara ,Thoramangalam ,Dinakaran ,
× RELATED சேலம் அருகே பரபரப்பு ஓடை பாலத்திற்கு...